நம் தனிப்பட்ட எண்ணங்கள், திறமைகள் மட்டுமல்லாமல் நாம் வாழும் குடும்பம்,
சமூகம் வாழ்வை எதிர்கொள்ளவும், செதுக்கவும் செய்து நமக்கென்று ஒரு வடிவை தருகிறது.
ஆதலால்தான் குடும்பத்திலும் சமூகத்திலும் ஏற்படும் மாற்றங்கள் தனிமனிதனின்
வாழ்வில் மாற்றங்களை தருகிறது.
இங்கு நம்மை சுற்றி நிகழும் சம்பவங்களும், அரசியல் சட்ட திட்டங்களும் எப்படி
மக்களின் வாழ்வை, வாழ்வாதாரத்தை தீர்மானிக்கும் என்று யோசிப்பதும், நல்லதெனில்
துணையாகவும், இல்லாதுபோனால் மாற்றத்தையும் வேண்டுவது நம் கடமையும் உரிமையும் ஆகும்
என்பது என் கருத்து. ஆகவே கதையின் கருவாக இருக்கும் நாட்டு நடப்புகளை இங்கு பதிக்கிறேன்.
******************************************************************
கதையின் கரு:
காத்து வாங்கலையோ...காத்து! - கரு
‘தேசிய நீர்கொள்கை, 2012’ நாம் கண்டிப்பாக தெரிந்துக்கொண்டு யோசிக்கவேண்டிய
கட்டாயத்தில் நம்மை கொண்டு நிறுத்தியுள்ளது.
பலர் கட்டுரைகளாக மக்களுக்கு கொண்டுசெல்லும் கருத்தை நான் இங்கு கதையாக சொல்ல
முயற்சித்ததே
காத்து வாங்கலையோ....காத்து! - கதை
பசியா ... பஞ்சமா... மூச்! இல்லவே இல்லை...
பசியா..பஞ்சமா..மூச்! இல்லவே இல்லை...கரு
விருத்தாசலம் முதல்... திருவாரூர் வரை ஸ்வாஹா...
காவிரி படுகையைக் காவு வாங்கும் மீத்தேன்..!
இதை கருவாக கொண்டு முயற்சித்த சிறுகதையே
பசியா...பஞ்சமா..மூச்! இல்லவே இல்லை - கதை
*************************************************
சுடுகாட்டுக்குப் போறேன்...
இக்கதை நம் நாட்டின் சில்லறை வியாபாரத்தில் அந்நிய முதலீடை பற்றியது.
****************************************************************
பணம் காட்டும் நிறம்
இக்கதை ஒரு வாடகைத்தாய் பற்றியது.
ஒரு வருடத்திற்கு பல கோடி ருபாய் புழங்கும் தொழிலாகவும் இருப்பது எது தெரியுமா? ..வாடகைத்தாய் தொழிலே! இந்திய மருத்துவம் இதை அனுமதித்தாலும் அதற்கான சட்டம் என்பது இன்னும் உருவாகவில்லை. அம்மா என்று அழைக்கும் தொப்புள்கொடி பந்தத்தை பணம் கொடுத்து வாங்கிவிடும் நிலை! கசப்பான உண்மையே!
இதை மையமாக கொண்டு வாடகைத்தாயின் நிலையை பற்றி சொல்ல முனைந்ததே, என் சிறுமுயற்சிதான் இக்கதை!
No comments:
Post a Comment